சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!!

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் மார்ச் 26-ஆம் தேதி வேலை வாய்ப்பு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது.சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வேலைகள் 2018 க்கு பிறகு அதிகரித்துள்ளதாக தெரிவித்தது.

2022-ஆம் ஆண்டுடன் அந்த எண்ணிக்கையை ஒப்பிடுகையில் அது சுமார் 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதிய வேலை வாய்ப்புகள் உருவாவதற்கு முக்கிய காரணங்களாக நிறுவன விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு போன்றவைகளே என்று கூறியது.

வேலை தேடுபவர்கள் எண்ணிக்கையை விட வேலை காலியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து கூடியது.

கல்வி தகுதியைக் காட்டிலும் அனுபவம் மற்றும் திறன்கள் அடிப்படையாக கொண்டு பெரும்பாலான முதலாளிகள் வேலைகளை வழங்குவதாகவும் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு தொழில் வல்லுநர்கள்,நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து உயர்ந்தன.

தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி நீக்கங்கள் இருந்த போதிலும் தொழில்நுட்ப தேவைகளுக்கான தேவை வலுவாக இருந்தது என்று தெரிவித்துள்ளது.