பங்குனி உத்திர திருவிழா-2024

பங்குனி உத்திர திருவிழா-2024

வரும் மார்ச் 24-ஆம் தேதி யீஷீன் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறும் என்று ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மார்ச் 23-ஆம் தேதியன்று (நாளை) செம்பவாங் யீஷீன் பகுதிகளில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ரத ஊர்வலம் நடைபெறும்.

விழாவின் ஒரு பகுதியாக முருகனின் அறுபடை வீடு அலங்காரம் செய்யப்படும்.

கோயிலுக்கு வருபவர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்படும்.

பங்குனி திருவிழா இந்த ஆண்டு வார இறுதியில் வருகிறது. கிட்டதட்ட 2000 காவடிகள் மற்றும் பால்குடங்கள் நேர்த்திக்கடனாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.