மோசமான வானிலை காரணமாக கடலில் இரசாயன டேங்கர் கவிழ்ந்து விபத்து!! கடலில் கலந்திருக்குமா? ஊழியர்களின் கதி?

மோசமான வானிலை காரணமாக கடலில் இரசாயன டேங்கர் கவிழ்ந்து விபத்து!! கடலில் கலந்திருக்குமா? ஊழியர்களின் கதி?

தென்கொரியாவிற்கு சொந்தமான ரசாயனக் கப்பல் ஒன்று ஜப்பானின் கடற்கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.

டேங்கர் கப்பலில் 11 பணியாளர்கள் இருந்தனர்.

அவர்களில் ஒன்பது பேர் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்டவர்களில் 7 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் டேங்கரில் அக்ரிலிக் அமிலம் இருந்ததாகவும், ஆனால் கசிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.