உணவகத்தில் உணவு சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு உடல் நலக்குறைவு!!

உணவகத்தில் உணவு சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு உடல்நலக் குறைவு!!

சிங்கப்பூரின் புங்கோலில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு உண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் மார்ச் 10ஆம் தேதி அன்று மதிய உணவிற்காக அந்த உணவகத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் இருவர் குழந்தைகள் என்று அவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக சிங்கப்பூர் உணவு நிறுவனம், சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் தெரிவித்தன.