கிளமெண்டி வெஸ்ட் ஸ்ட்ரீட்டில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!!கரும்புகையை சுவாசித்த மூவர்!!

கிளமெண்டி வெஸ்ட் ஸ்ட்ரீட்டில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!!கரும்புகையை சுவாசித்த மூவர்!!

சிங்கப்பூரில் உள்ள கிளமெண்டி குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் மார்ச் 19ஆம் தேதியன்று நடந்தது.

இந்த தீ விபத்து குறித்து பிற்பகல் 2.10 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் மூன்று பேர் பாதிக்கப்பட்டனர்.

கரும்புகையை சுவாசித்த மூவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சார்ஜ் போடப்பட்டிருந்த PMAவில் இருந்து தீ பற்ற தொடங்கியுள்ளது.இதுவே இந்த தீ விபத்திற்கான காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.