சிங்கப்பூரில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து!! உடைந்து நொறுங்கிய கண்ணாடிகள்!!

சிங்கப்பூரில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து!! உடைந்து நொறுங்கிய கண்ணாடிகள்!!

ஜோகூர் பாரு சோதனைச் சாவடியில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்டன.இச்சம்பவம் மார்ச் 18 அன்று காலை 6 மணிக்கு முன்பு நடந்தது.

இந்த சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்த படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.கண்ணாடி உடைந்ததையும், சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு ஏற்பட்டிருந்த சேதத்தையும் காணலாம்.

இந்த விபத்து சுல்தான் இஸ்கந்தர் கட்டிட குடியேற்ற வளாகத்தில் நடந்தது.

தனியார் பேருந்து ஒன்று 160 எண் கொண்ட பேருந்து மீது இடது பக்கத்தில் மோதியது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.