மின்கம்பத்தில் சரமாரியாக மோதிய பேருந்து… யார் செஞ்ச புண்ணியம்னு தெரியல… நூலிலையில் உயிர்தப்பிய பயணிகள்!!

மின்கம்பத்தில் சரமாரியாக மோதிய பேருந்து... யார் செஞ்ச புண்ணியம்னு தெரியல... நூலிலையில் உயிர்தப்பிய பயணிகள்!!

சிங்கப்பூரில் உள்ள பிடோக் நார்த் அவென்யூ 3-இல் SMRT நிறுவனத்தின் 67 எண் கொண்ட டபுள் டெக்கர் பஸ் மின் விளக்கு கம்பத்தை இடித்ததில் விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் மார்ச் 17-ஆம் தேதி (நேற்று) பிற்பகல் 1.30 மணியளவில் நடந்தது. இந்த செய்தியை 8 world செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து SMRT நிறுவனம் அதன் விசாரணையை மேற்கொண்டுள்ளது.

இந்த சம்பவம் பஸ் நிறுத்தம் அருகே நடந்துள்ளது.

இந்த விபத்து குறித்த படங்கள் பகிரப்பட்டுள்ளது.

அந்த படங்களில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி இருப்பதையும், அதன் சக்கரங்கள் நடைப்பாதையில் ஏறியதையும் காணலாம்.

இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அதில் பயணத்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டது. பஸ்ஸின் டிரைவர் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ததாக தெரிவித்தது.