சிங்கப்பூரில் வயதான தம்பதியினரை சரமாரியாக தாக்கிய நபர்!!

சிங்கப்பூரில் வயதான தம்பதியினரை சரமாரியாக தாக்கிய நபர்!!

சிங்கப்பூரில் Goh Wei Yew(41) என்பவர் வயதான தம்பதியினரை தாக்கி காயத்தை எடுப்படுத்தினார். இந்த சம்பவம் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடந்தது.

Goh Wei Yew என்பவர் பொங்கோல் பேரங்காடியில் உள்ள ஒரு கடையில் விற்பனையாளராக பணி புரிந்தார்.

அந்த கடைக்கு வந்த ஓர் வயதான தம்பதி தொலைக்காட்சியைப் குறித்து கேட்டுள்ளனர். அவர் தங்களிடம் பேசிய விதம் சரியில்லை என புகார் கூறியுள்ளனர்.

பின்னர் அவரை புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து அவர்கள் சென்றனர்.

அதன் பிறகு உடல்நிலை சரியில்லை வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டு கடையிலிருந்து வெளியேறினார்.

தற்செயலாக அவர் அந்த வயதான தம்பதியினரைப் பார்த்தார்.

உடனே அவர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அந்த வயதான தம்பதியினரை சரமாரியாக தாக்கினார்.

அந்த பெண்ணின் தலையைப் பிடித்து அருகில் இருந்த சுவரில் மோதி கீழே தள்ளினார்.

அந்த பெண்ணின் அலறலைக் கேட்டு தடுக்க வந்த  அவரது கணவரையும் சரமாரியாக தாக்கினார்.

இந்த கொடூரமான தாக்குதலால் அவர்கள் இருவரும் காயமடைந்தனர்.

இந்த சண்டை சுமார் 30 விநாடிகளுக்கு நீடித்தது.

அவ்வழியாக சென்ற இருவர் அந்த சண்டையை தடுத்தி நிறுத்தினர் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

கோ மீது ஏற்கனவே திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. அதற்காக அவர் தண்டனையை அனுபவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேண்டுமென்றே தாக்கி காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக Goh – விற்கு 7 வாரங்கள் சிறைத்தனை விதிக்கப்பட்டது.