சிங்கப்பூரில் உள்ள சாங்கியில் இரண்டு கார்கள் மோதி விபத்து ஏற்ப்பட்டது!!

சிங்கப்பூரில் உள்ள சாங்கியில் இரண்டு கார்கள் மோதி விபத்து ஏற்ப்பட்டது!!

சிங்கப்பூரில் சாங்கி சாலையில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் மார்ச் 9ஆம் தேதியன்று நடந்தது.

இந்த விபத்து குறித்து காலை 10.05 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் 3 மாத பெண் குழந்தை உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.