நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் கடத்தல்!!

நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் கடத்தல்!!

நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் பள்ளி மாணவர்கள் 227 பேரை கடத்திச் சென்றனர்.

இந்த சம்பவம் மார்ச் 7ஆம் தேதியன்று நடந்தது.

ஆரம்பத்தில் 100 மாணவர்களை அவர்கள் கடத்திச் சென்றதாகவும், பின்னர் அவர்களை விடுவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மற்ற மாணவர்கள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் எத்தனை மாணவர்கள் காணவில்லை என்பது குறித்த தகவல் தெளிவாகத் தெரியவில்லை.

அப்பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லாததே அதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மனித உரிமைகளை மையமாகக் கொண்ட ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், மாணவர்களை பாதுகாப்பாக மீட்குமாறு நைஜீரிய அதிகாரிகளை கேட்டுக் கொண்டது.