விமானத்தில் ஓர் பயணியின் பையிலிருந்து பணத்தை திருடிய மற்றொரு பயணி!!

விமானத்தில் ஓர் பயணியின் பையிலிருந்து பணத்தை திருடிய மற்றொரு பயணி!!

விமானத்தில் பணத்தை திருடியதாக 54 வயதுடைய சீன நாட்டைச் சேர்ந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த நபர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் பையில் இருந்து $107,000 பணத்தை திருடியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மார்ச் 5ஆம் தேதியன்று நடந்தது.

பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அந்த நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

அந்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

மேலும் விமானத்தில் பயணம் செய்பவர்கள் தங்களுடைய விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தை தங்களுடன் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.