தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய வீடுகளை திறந்து வைத்தார்!!

தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய வீடுகளை திறந்து வைத்தார்!!

தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காட்டுப்பட்டியில் ரூபாய் 24 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 264 எண்ணிக்கைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பினை தமிழ்நாடு முதல்வர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து சிறப்பித்தார்கள். இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி அவர்கள் பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஆணையினை வழங்கினார்கள்..

உடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் பேரூராட்சித் தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஒன்றிய நகரக் கழக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.