ஸ்பெயினில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து!! ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலி!!

ஸ்பெயினில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து!! ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலி!!

ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும் இதில் பாதிக்கப்பட்ட 15 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த தீ விபத்து மார்ச் 4ஆம் தேதி அன்று அதிகாலை 2:15 மணிக்கு ஏற்பட்டதாகவும், அதிகாலை 4 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் கூறினர்.