மலேசியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற சிங்கப்பூரர்!!

மலேசியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற சிங்கப்பூரர்!!

மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற சிங்கப்பூரைச் சேர்ந்த 50 வயது நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.

வழக்கமான சோதனையின் போது அந்த நபர் ஒரு காரின் பின்பகுதியில் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த நபருக்கு உதவிய 20 வயதுக்குட்பட்ட இரண்டு மலேசிய பெண்களையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் அந்த பெண்களிடம் $3000 செலுத்தி சட்டவிரோதமாக மலேசியாவிற்கு வந்தது தெரியவந்தது.

பிப்ரவரி மாதம், அந்த நபரின் தண்டனை காலம் முடிந்து அவர் சிங்கப்பூருக்கு திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.