சிங்கப்பூரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை!! அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற இளைஞன்!!

சிங்கப்பூரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை!! அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற இளைஞன்!!

சிங்கப்பூரில் சில இடங்களில் கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிரடி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது.

சுமார் 119 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். woodlands,clementi,punggol,sembawang,tampines ஆகிய இடங்களில் மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

clementi avenue வில் சோதனையின் போது படுக்கையறையில் மறைந்திருந்த 19 வயது இளைஞன் அதிகாரியை கத்தியால் குத்த முயன்றான் .உடனிருந்த அதிகாரிகள் அந்த இளைஞனை தடுத்து நிறுத்தினர்.அதன்பின் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோதனையின் போது சுமார் 343,000 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் சிலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்று கருதப்படுகிறது.