தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது- சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்!!

தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது- சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் !!

இந்தியா முழுவதும் போதை மருந்து புழக்கம் மற்றும் கடத்தல் பரவலாக உள்ளது தமிழகத்தை மட்டும் குறை சொல்லி பேசக்கூடாது என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறினார். அவர் புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது…

தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

அதிமுக யாரை அழைத்து கூட்டணி அமைத்தாலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது.

ஒவ்வொரு கட்சியும் யார் வேட்பாளர் என்பதை அவர்கள் முடிவு செய்கின்றனர்.

கட்சிக்குள் ஒருவருக்கு சீட்டு வேண்டும் ஒருவருக்கு சீட்டு கொடுக்கக் கூடாது என கூறுவது வாடிக்கையான ஒன்று.தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு,வேட்பாளர் அறிவிப்பு போன்றவற்றை முதலில் வெளியிடுபவர்கள் வெற்றி பெறுவார்கள் என கூற முடியாது.

தேசிய அளவில் பாஜக 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரதமர் கூறுவது ஆசை மட்டும் அல்ல பேராசையாகும். இந்தி பேசும் மாநிலங்களிலும், இந்துத்துவ மாநிலங்களிலும் பாஜக வளர்ந்துள்ளது. மற்றபடி தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதால் அக்கட்சி வளர்ந்து வருவதாக கருத முடியாது. தமிழகத்தில் திமுக -காங்.கூட்டணி பலமானது. இது அமோக வெற்றிபெறும். வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் அக்கட்சி நிலை தெரியும் .