சிங்கப்பூரில் செங்காங் நிர்வாக வளாகத்தில் தீ விபத்து!!

சிங்கப்பூரில் செங்காங் நிர்வாக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இச்சம்பவம் பிப்ரவரி 25ஆம் தேதி அன்று நடந்தது.தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்து சுமார் 200 பேர் வெளியேற்றப்பட்டனர்

இந்த தீ விபத்து குறித்து சுமார் 9.15 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

மேலிருந்து கீழே விழுந்ததில் ஒரு நபருக்கு வெட்டு காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.காயமடைந்த அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் 13 Anchorvale Crescent இல் நடந்தது. இது Balletwaters EC இல் அமைந்துள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.