மலேசியாவில் ஏற்பட்ட விபத்து!!சம்பவ இடத்திலேயே பலியான சிங்கப்பூர் இளைஞர்!!

மலேசியாவில் ஏற்பட்ட விபத்து!!சம்பவ இடத்திலேயே பலியான சிங்கப்பூர் இளைஞர்!!

மலேசியாவில் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் கார் ஒன்று சாலையின் தடுப்புச் சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த 24 வயது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பிப்ரவரி 24ஆம் தேதியன்று மதியம் 1.20 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பாதிக்கப்பட்டவரின் உடலை மீட்டனர்.

மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.