சிங்கப்பூரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போலி பொருட்கள்!!

சிங்கப்பூரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போலி பொருட்கள்!!

சிங்கப்பூரில் போலியான பொருட்களை விற்ற 55 வயதான நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜூரோங் கிழக்கில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் சோதனை நடத்தியதில் 25,000-க்கும் மேற்பட்ட பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

அவற்றின் மதிப்பு சுமார் $2 மில்லியன் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் போலியான பொருட்களை விற்பனை செய்வது கடுமையான குற்றம் என்று அவர்கள் கூறினர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $100,000 வரை அபராதம் தீர்ப்பு வழங்கப்படலாம் .அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.