சிங்கப்பூரில் அங் மோ கியோவில் சாலையைக் கடக்க முயன்ற நபர் மீது லாரி மோதி விபத்து!!

சிங்கப்பூரில் அங் மோ கியோவில் சாலையைக் கடக்க முயன்ற நபர் மீது லாரி மோதி விபத்து!!

சிங்கப்பூரில் பிப்ரவரி 22ஆம் தேதி அன்று அங் மோ கியோவில் விபத்து ஏற்பட்டது.

26 வயதான நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது அவர் மீது லாரி மோதியதாக கூறப்படுகிறது.

அந்த நபர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விபத்து குறித்து மாலை 5:15 மணி அளவில் காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

43 வயதான லாரி ஓட்டுநர் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ SG ROAD VIGILANTE முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது