திருமயம் ஒன்றியம் குழிபிறை ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்!!

திருமயம் ஒன்றியம் குழிபிறை ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்!!

சமூகத்தணிக்கை ..திருமயம் பிப்.23____திருமயம் ஒன்றியம் குழிபிறை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 2022 -23 சமூகத் தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இளஞ்சி தலைமை வகித்தார்.

வட்டார வள பயிற்றுநர் சங்கர்ராம் ,கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், ஊராட்சித் தலைவர் அழகப்பன் பணித்தளப் பொறுப்பாளர் அடைக்கம்மை, மக்கள் நலப் பணியாளர் சரவணன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். கடந்த ஆண்டில் நடைபெற்ற பணிகள். குறித்து அறிக்கை வாசிக்கப்பட்டு தலத்தணிக்கை நடந்தது.ஊராட்சி உதவியாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.