அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டியில் இருந்து அரிமளம்,திருமயம்,புதுக்கோட்டை வழியாக சென்னைக்கு பஸ் விட கலெக்டரிடம் மனு!!

அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டியில் இருந்து அரிமளம்,திருமயம்,புதுக்கோட்டை வழியாக சென்னைக்கு பஸ் விட கலெக்டரிடம் மனு!!

அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டியில் இருந்து அரிமளம்,திருமயம்,புதுக்கோட்டை வழியாக சென்னைக்கு பஸ் விட பாரதிய ஜனதா ஒன்றிய செயலர் கணேசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கலெக்டருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது… தற்போது இந்த அரசு பஸ் அரிமளத்தில் இருந்து தினசரி இரவு 8 மணிக்கு புறப்பட்டுசென்னை செல்கிறது.

மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கே.புதுப்பட்டி ஒரு பிர்க்கா தலைமையிடம். இதனைச்சுற்றி 108 கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் சென்னை செல்ல அரிமளம், புதுகை,காரைக்குடி,அறந்தாங்கி சென்று விரைவு பஸ் பிடித்து செல்ல வேண்டியுள்ளது. இதற்கு அதிக செலவும்,பயணநேரமும் அதிகமாகிறது.

குறிப்பாக பெண்கள்,முதியோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அரசு அரிமளத்தில் இருந்து புறப்படும் பஸ்ஸை கே.புதுப்பட்டி வரை (10 கி.மீ) நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் 108 கிராம மக்கள் பஸ்வசதி பெறுவதுடன் பஸ்சிற்கு கூடுதல் வருவாயும் கிடைக்கும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.