ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிரக்!!15 பேர் பலி!!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிரக்!!15 பேர் பலி!!

மத்திய பிலிப்பைன்சில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிரக் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் பிப்ரவரி 21ஆம் தேதி அன்று நடந்தது.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர்.

டிரக்கில் கால்நடை வியாபாரிகள் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பள்ளத்தாக்கின் ஆழம் 40 முதல் 50 மீட்டர் இருக்கும் என்று கூறப்படுகிறது.

டிரக் ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர்.