சிங்கப்பூரில் நடந்த பயங்கர விபத்து!! தீப்பிடித்து எரிந்த பைக்!!

சிங்கப்பூரில் கிழக்கு கடற்கரை பார்க்வேயில், இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் பிப்ரவரி 21ஆம் தேதியன்று காலை 9 மணி அளவில் இந்த துயர சம்பவம் நேர்ந்தது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த 20 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்திருந்த 22 வயது பெண் ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.