சிங்கப்பூரில் கார்கள் மோதி கொண்டு விபத்து!! ஒரு வயது குழந்தை உட்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

சிங்கப்பூரில் கார்கள் மோதி கொண்டு விபத்து!! ஒரு வயது குழந்தை உட்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

சிங்கப்பூரில் மேக்பர்சன் சாலையில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் பிப்ரவரி 18ஆம் தேதியன்று நடந்தது.

இந்த விபத்து குறித்து மதியம் 3.10 மணியளவில் காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததக தெரிவித்தது.

இதில் பாதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை, 29 வயதான ஓட்டுநர் உட்பட ஐந்து பேரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

மற்றொரு காரில் இருந்தவர்களைப் பற்றிய தகவல் எதுவும் அளிக்கப்படவில்லை..

இந்த விபத்து குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.