சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் ஈஸ்ட் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து!! தீக்கு இரையான பொருட்கள்!!

சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் ஈஸ்ட் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து!! தீக்கு இரையான பொருட்கள்!!

சிங்கப்பூரில் ஜூரோங் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் பிப்ரவரி 18ஆம் தேதி அன்று அதிகாலை நடந்தது.

இந்த தீ விபத்து குறித்து அதிகாலை 1.50 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

அதிகாரிகள் வருவதற்கு முன்னரே பாதிக்கப்பட்ட குடியிருப்பில் இருந்து இரண்டு நபர்கள் வெளியேறியதாக கூறப்படுகிறது.

ஒருவர் மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அவர்கள் கூறினர்.