பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய 67 வயதுடைய நபர்!! காரணம் என்ன?

டிசம்பர் 6ஆம் தேதி அன்று அமெரிக்காவின் Las Vegas-ல் உள்ள Nevada பல்கலைக்கழகத்தில் 67 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து காலை 11:45 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறயினர், துரிதமாக செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியவரை சுட்டுக்கொன்றனர்.

இச்சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி Joe Biden கண்டனம் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும், சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 600க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறினர்.