தாய்லாந்து ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 6 பேர்!! நடந்தது என்ன?

தாய்லாந்து ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 6 பேர்!! நடந்தது என்ன?

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள Grand Hyatt Erawan ஹோட்டலில் குறைந்தது 6 பேர் இறந்து கிடந்ததாக அந்நாட்டு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

அவர்களில் நான்கு பேர் வியட்நாமியர்கள், இருவர் வியட்நாம் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து ஜூலை 16 ஆம் தேதி தாய்லாந்து நேரப்படி மாலை 5.30 மணியளவில் அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடக அறிக்கைகளை காவல்துறை அதிகாரி நிராகரித்தார்.

துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான எந்த தடயங்களும் இல்லை என போலீசார் கூறினார்.

மேலும் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தார்.

அறையில் கோப்பைகள் மற்றும் தெர்மோஸ்களில் சயனைட்டின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது.

இறந்தவர்களின் உடல்களைப் பிரேதப் பரிசோதனையில் தடயங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இறந்தவர்கள் 37 வயது முதல் 56 வயது வரை உள்ளவர்கள் என்றும், மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டது.