மூன்று வார கைக்குழந்தையுடன் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்த 34 வயது பெண்!!

சிங்கப்பூரில் 34 வயதுடைய பெண்ணும், மூன்று வார குழந்தையும் ஹௌசிங் போர்டு ப்ளாக்கின் அடி தளத்தில் சடலமாக கிடைந்துள்ளனர் . இச்சம்பவம் டிசம்பர் 3-ஆம் தேதி காலை கிம் மோவில் நிகழ்ந்துள்ளது . காவல்துறைக்கு இச்சம்பவம் குறித்து காலை 11.15 மணியளவில் தகவல் கிடைத்ததாக கூறினர்.

சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை சம்பவ இடத்திற்கு விரைந்தன . தரையில் அந்த பெண்ணும் , மூன்று வார கைக்குழந்தையும் உடல் அசைவின்றி கிடந்தன . அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்த இருவரும் தாய் ,மகன் என்று சீனா மொழி செய்தி நிறுவனம் Lianhe zaobao கூறியுள்ளது .

அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசி ஒருவர் கடந்து செல்லும் போது பெண்ணும், குழந்தையும் தரையில் விழுந்து கிடைப்பதை கண்டவுடன் காவல்துறைக்கு தகவல் அளித்ததாக தெரிவித்தது.

இந்த உயிரிழப்பில் சந்தேகித்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஏதும் இல்லை என்று தெரிவித்தது.

இதற்கு முன்னதாக இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.யூனோஸில் உள்ள hdb ப்ளாக்கின் அடித்தளத்தில் நவம்பர் 5-ஆம் தேதி அன்று 33 வயது பெண்ணும், ஒரு வயது குழந்தையும் சடலமாக கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.