சிங்கப்பூரில் 33 பேர் கைது!! சட்டவிரோதமாக வேலைப் பார்த்தது உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகம்!!

சிங்கப்பூரில் கேலாங் பகுதியில் சட்டவிரோதமாக வேலை பார்த்தது உட்பட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் 21 வயது முதல் 54 வயதுடையவர்கள்.

சந்தேக நபர்கள் அக்டோபர் 7-ஆம் தேதி 29 கேலாங் லோரோங்கில் உள்ள காபிகடையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் வியட்நாம் மற்றும் சீனர்களும் அடங்குவர்.சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.அவர்கள் 31 வயது முதல் 59 வயதுள்ளவர்கள்.

மேலும் சூதாட்டப் பொருட்கள் மற்றும் 140 வெள்ளி பணமும் கைப்பற்றப்பட்டனர்.

சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 66 வயதுடைய நபரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தது.