தாய்லாந்து ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய 3 வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்…!!!

தாய்லாந்து ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய 3 வெளிநாட்டு ஊழியர்கள் மரணம்...!!!

தாய்லாந்தில் கடந்த சனிக்கிழமை
(ஆகஸ்ட் 24) ரயில் சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்ததில் 3 வெளிநாட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

அவர்கள் பாக் சொங் மாவட்டத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அது இடிந்து விழுந்தது.

இந்த மாவட்டம் தலைநகர் பேங்காங்கிலிருந்து இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கிட்டத்தட்ட 5 நாட்களாக அவர்களைத் தேடுவதற்கான மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் தோல்வியடைந்த நிலையில் மூவரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்த மூவரில் இருவர் சீனர்கள் மற்றும் ஒருவர் மியான்மரை சேர்ந்தவர்.

ஆகஸ்ட் 30 அன்று வெளியான முதற்கட்ட விசாரணையில் மூவரும் மூச்சு விடாமல் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

குழாய் வழியாக ஊழியர்களுக்கு ஆக்ஸிஜனை வழங்க அதிகாரிகள் முயற்சித்தனர்.

ஆனால் ஆக்சிஜன் குழாய் ஊழியர்களை சென்று அடைந்ததா என்பது தெரியவில்லை என அதிகாரிகள் கூறினர்.

சுரங்கப்பாதையில் இருந்து மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here ⬇️