Latest Singapore News in Tamil

ஊழியர்களின் அலட்சியத்தால் பறிபோன 290 பேர் உயிர்!

கடந்த மாதம் 290 பேர் உயிரிழந்த ரயில் கோர விபத்து தொடர்பாக வெள்ளிக்கிழமை, இந்தியாவின் மத்திய காவல்துறை மூன்று ரயில்வே ஊழியர்களைக் காவலில் எடுத்தது.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ஜூன் மாதம் நடந்த ரயில் விபத்தில், கிட்டத்தட்ட 1,000 பேர் காயமடைந்தனர்.

மேற்கு வங்கத்தில் இருந்து பயணித்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிசாவில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியதால், எதிர்திசையில் சென்ற மற்றொரு ரயிலுடன் மும்முனை சிக்கல் ஏற்பட்டது.

இந்த மூன்று ரயில்கள் மோதியது இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகும். இந்த விபத்து 1995 க்குப் பிறகு இந்தியாவின் மிக மோசமான விபத்து ஆகும்.

குற்றவியல் அலட்சியம் வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.