திட்டம் அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்குபின் சாதனை அளவை தொட்டுள்ள…….

சிங்கப்பூரில் முதன்முறையாக திட்டம் ஒன்று அறிமுகம் கண்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக உயர்நிலைப் பள்ளிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாக வந்துள்ளதாக கல்வி அமைச்சகம் கூறியது.

சுமார் 38,000 விண்ணப்பங்கள் 14,500 விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.

இதற்கு காரணம் ஆரம்ப பள்ளி மாணவர்கள் இறுதியாண்டு தேர்வு எழுதும் முன் உயர்நிலைப் பள்ளிகளில் இடம்பெற விளையாட்டு, கலை போன்ற பல்வேறு பாடங்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதே என கூறப்படுகிறது.