ஜப்பானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கை..!!

ஜப்பானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கை..!!

ஜப்பானின் கியூஷு மற்றும் ஷிகோகூ பகுதிகளில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து மீண்டும் 7.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கியூஷு மற்றும் ஷிகோகூ பகுதிகளில் 1 மீட்டர் உயரத்திற்கு அலைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில பகுதிகளில் 20 சென்டிமீட்டர் வரையிலான அலைகள் வந்துள்ளது.

முதல் நிலநடுக்கம் பூமியிலிருந்து 33 கிலோமீட்டர் ஆழத்திலும்,இரண்டாவது நிலநடுக்கம் 25 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒசாக்கா மற்றும் தோக்கியோவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.