போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்…!!!

போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்...!!!

இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரில் போலி மருத்துவரின் அறுவை சிகிச்சை மூலம் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) அஜித்குமார் பூரி என்ற மருத்துவர் நடத்தும் மருந்தகத்தில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.

சிறுவன் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுவனின் குடும்பத்தாருக்கு தெரிவிக்காமல் மருத்துவர் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், தனது கைத்தொலைபேசியில் அறுவை சிகிச்சை செய்வது தொடர்பான வீடியோக்களை பார்த்து அந்தச் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்தது தெரியவந்துள்ளது.

அறுவை சிகிச்சையின் போது சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

இதையறிந்து மருந்தகத்தை அணுகிய குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த போலி மருத்துவர்.

இதையடுத்து அந்த சிறுவனை பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போலி மருத்துவர் முடிவு செய்தார்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதால், உடலை அப்படியே விட்டுவிட்டு, மருத்துவர் தப்பியோடி தலைமறைவானார்.

இந்நிலையில் சிறுவன் இறப்பிற்கு காரணமான போலி மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் அவரது மருந்தக ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Follow us on : click here ⬇️