புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி..!!!

புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி..!!!

இந்திய தலைநகர் புதுடெல்லியில் உள்ள ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகள் உட்பட 10 பெண்கள் அடங்குவர்.

மேலும் இச்சம்பவத்தில் 11 பேர் காயமடைந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற கும்பமேளாவிற்கு செல்வதற்காக மக்கள் ரயில்களில் ஏற முயன்றபோது நேற்று மாலை (பிப்ரவரி 15) இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இந்தச் சம்பவம் வருத்தமளிப்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரயாக்ராஜ் நகருக்கு மக்களை அழைத்து வர சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த மாதம் கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.