சிங்கப்பூரில் சாலை விபத்தில் சிக்கிய 14 வயது சிறுவன்…..

சிங்கப்பூரில் உள்ள தோ பாயோ லொரோங் 6-இல் சாலை விபத்தில் சிக்கிய 14 வயது சிறுவன். இந்த விபத்து அக்டோபர் 4-ஆம் தேதி புதன்கிழமை காலை சுமார் 8.30 மணியளவில் நடந்ததுள்ளது. சம்பவ இடத்திற்கு காவல்துறையும், சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையும் விரைந்தன.

சைக்கிளில் சிறுவன் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து சிறுவனின் சைக்கிளுக்கும் காருக்கும் இடையில் நடந்துள்ளதாக காவல்துறை கூறியது.

SG Road Vigilante முகநூல் பக்கத்தில் இந்த விபத்து குறித்த படங்கள் பகிரப்பட்டுள்ளது.

அந்த புகைப்படங்களில் Silver GetGo காரின் கண்ணாடி உடைந்திருப்பதைக் காணலாம்.

காருக்கு முன்னால் சுமார் 10 மீட்டர் தூரத்தில் தரையில் விழுந்து கிடக்கும் சைக்கிளையும், ஷூவையும் காண முடிகிறது.

சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். KK மகளிர் சிறுவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது சிறுவன் சுயநினைவுடன் இருந்ததாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை கூறியது.