Singapore Breaking News in Tamil

14 மாத குழந்தையைக் கடித்த இல்ல பணி பெண்!

சிங்கப்பூரில் 33 வயதுடைய இந்தோனேஷியா பணிப் பெண் 14 மாத குழந்தையை கவனித்துக் கொண்டு இல்ல பணி பெண்ணாக வேலை செய்தார்.

மாலை நேரத்தில் அந்த குழந்தை தூங்க மறுத்துள்ளது.

இதனால் கோவம் அடைந்த அந்த பணி பெண் குழந்தையின் கையைக் கடித்துள்ளார்.

குழந்தையின் தாய் குழந்தையின் இடது கையில் காயம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன்பின், இது குறித்து குழந்தையின் தாய் புகார் அளித்தார்.

ஆத்திரத்தில் குழந்தையின் கையில் கடித்த இல்ல பணி பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.