சீனாவில் சில நாட்களுக்கு முன் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 மாணவர்கள் பலியான சோகம் மறைவதற்குள் மீண்டும் ஓர் தீ விபத்து!!

சீனாவில் சில நாட்களுக்கு முன் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 மாணவர்கள் பலியான சோகம் மறைவதற்குள் மீண்டும் ஓர் தீ விபத்து!!

மத்திய சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுவரை இந்த தீ விபத்தில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் ஜனவரி 24ஆம் தேதியன்று பிற்பகல் 3.24 மணி அளவில் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக 12 பேரை காவல்துறையினர் காவலில் வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.